# சந்திராயன் - I

சந்திராயன் I நிலவுப்பயணத்திற்கான ஒரு கலன். இது நிலவுக்கு அனுப்பப்பட்ட இந்தியாவின் முதல் ஆளில்லா நுண்ணாய்வி ஆகும். 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ISRO-ஆல் விண்ணில் ஏவப்பட்டது. 
இது 2009- ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை செயல்பட்டது. இதன் ஆய்வு வலம் வரு மற்றும் தரையிறங்கு வகைகளை உள்ளடக்கியது. இது ISRO-வின் ஐந்து பயன் சுமைகளை எடுத்துச்சென்றது. மேலும், இது அமெரிக்காவின் NASA  விண்வெளி மையம், ஐரோப்பிய விண்வெளிமையம் (ESA),  பல்கேரிய விண்வெளிமையம் இவற்றின் 6 பயன்சுமைகளையும் இலவசமாக எடுத்துச்சென்றது.


சந்திராயன் 312 நாட்கள் விண்ணில் செயல்பட்டது. அப்போது திட்டமிடப்பட்ட இலக்குகளில் 95 சதவீதத்தை நிறைவு செய்தது.
--> பின்வருவன அதன் சாதனைகளில் சில

  1. நிலவின் மண்ணில் நீர் மூலுக்கூறுகள் அதிக பரப்பில் பரவியிருப்பதைக் கண்டறிந்தது.
  2. சந்திராயனின் கனிம வரை கருவி (Moon minerology Mapper), நிலவு முற்காலத்தில் முற்றிலும் உருகிய நிலையிலிருந்ததை உறுதி செய்கிறது.

    read more...

No comments:

Post a Comment