samacheer kalvi 10th book study material - தொன்மைத் தமிழகம்
- முதல் மாந்தன் தோன்றிய இடம் இலெமூரியா.
- இலெமூரியாவை “மனித நாகரிகத் தொட்டில்” என்பர்.
- தமிழகம் இன்றுபோல் இல்லாமல், குமரிமுனைக்குத் தெற்கே இன்னும் விரிந்து, குமரிமலை, பஃறுளி ஆறு முதலியவற்றை உள்ளடக்கி இருந்தது. இச்செய்தியைப் “பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள...” எனும் சிலப்பதிகாரப் பாடல் வரிகள் தெளிவாக உணர்த்துகிறது.
- “திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்க ளோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்” என தமிழின் பழமை சிறப்பினைப் பெருமிதம் பொங்க பாடியவர் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.
வாணிகம்:
- தமிழர்கள் அறத்தின் வழியே வாணிகம் செய்தார்கள். பொருள் ஈட்டுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொள்ளாதவர்கள். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொருள் ஈட்டினர்.
- நெல், கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, சாமை, வரகு முதலிய தானிய வகைகளையும், உளுந்து, கடலை, அவரை, துவரை, தட்டை, பச்சை, கொள்ளு, எள்ளு முதலிய பருப்பு வகைகளையும் தமிழர்கள் விற்றார்கள்.
கடல் வாணிகம்:
- பொன்னும், மணியும், முத்தும், துகிலும் கொண்டு கடல் கடந்து வாணிகம் செய்தனர்.
- கிறித்து பிறப்பதற்கு முன்பே கிரேக்கம், உரோமாபுரி, எகிப்து ஆகிய நாடுகளுக்கு அரிசியும், மயில்தோகையும், சந்தனமும் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது.
- கி.மு.பத்தாம் நூற்றாண்டில் அரசன் சாலமனுக்கு யானைத் தந்தமும், மயில்தோகையும், வாசனைப் பொருள்களும் அனுப்பப்பட்டன.
- தமிழர்கள் சாவக நாட்டுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.
மொழித் தொன்மை:
- தமிழ்ச்சங்கம் இருந்தது என்ற மரபுச் செய்தி இடைவிடாது இருந்து வருகிறது. இத்தகைய மரபுச் செய்தி இந்தியாவில் வேறெங்குமில்லை என்றார் தனிநாயகம் அடிகளார்.
- “தமிழ்கெழு கூடல்” என புறநானூறு கூறுகிறது.
- “தமிழ்வேலி” எனப் பரிபாடல் கூறுகிறது.
- “கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்” என மணிவாசகம் கூறுகிறது.
No comments:
Post a Comment