TamilNadu Surveyor-cum-Assistant Draughtsman Recruitment-2015

Ongoing Recruitment: Surveyor-cum-Assistant Draughtsman

Important Notice
Application are invited only through online mode up to 5.45PM on or before 28thth December 2015 for admission to the written examination for direct recruitment against the vacancies for the year 2013-14 in the above post include in the Tamil Nadu Town and Country Planning Subordinate Service.
IMPORTANT DATES FOR Surveyor-cum-Assistant Draughtsman RECRUITMENT-2015
DATE OF NOTIFICATION30-11-2015
Applications are invited only through online mode up to28-12-2015 (5.45PM)
Application FeesRs:300/-
After submitting online, printout of the application must be taken and either sent by post or dropped in a box at the office of the Director of Town and Country Planning, during working hours on working days,on or before28-12-2015(5.45PM)
Fees should be paid in the form of Demand Draft drawn in favour of "Director of Town and Country Planning".payable at chennai drawn on any scheduled bank.




நிலையான ‘அ’ பதிவேடு

VAO Exam Study Materials & Model Question Papers Pdf Free download

இப்பதிவேடு நில உட்பிரிவையும், அவற்றில் ஏற்படும் மாறுதல்களையும் காண்பிக்கும் நிலையான பதிவேடு ஆகும்.

நிலவரி திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு, பின்னர் பராமரிப்புக்காக ஒவ்வொரு வருவாய்க் கிராமத்திற்கும் தனித்தனியாக ‘அ’ பதிவேடு முதலில் கையால் எழுதப்பட்ட பிரதி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது.பின்னர் அந்தப் பிரதி ஒன்று அச்சிடப்பட்டு அனைத்து கிராமங்களுக்கும் கெட்டி அட்டை போட்ட பதிவேடுகளாக வழங்கப்பட்டுள்ளது.

இப்பதிவேட்டில் முதல் பகுதியாக வருவாய்க் கிராமத்தின் வரலாற்றுக் குறிப்பு (Descriptive Memoir)  வழங்கப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றுக் குறிப்பில் முதல்பகுதியில் வருவாய்க் கிராமத்தின் வருவாய்க்குண்டான அனைத்து விவரங்களும் அடங்கும்.

# காலப்போக்கில் வடமொழியில் மாற்றப்பட்ட தமிழ்ச் பெயர்கள்

நல்லதமிழில் இருந்த ஊர்ப் பெயர்கள். கடவுளர் பெயர்கள் காலப்போக்கில் வடமொழியில் மாற்றப்பட்டன, அவற்றுட்சில:
--> திருவரங்கம் - ஸ்ரீரங்கம்
திருச்சிற்றம்பலம் - சிதம்பரம்
திருமறைக்காடு - வேதாரணியம்
--> திருமுதுகுன்றம். பழமலை - விருத்தாசலம்
அங்கயற்கண்ணி - மீனாட்சி
அறம்வளர்த்தாள் - தர்மசம்வர்த்தனி

# டிஎன்பிஎஸ்சி பொதுத்தமிழ் - பயண இலக்கிய நூல்கள்

Group 2, Group 2A, VAO, Group 4 General Tamil Study Material
 பயணம் தொடர்பான கட்டுரை, கதை, கவிதை, படம், திரைப்படம் ஆகியவற்றை பயண இலக்கியம் எனலாம். பயண இலக்கியமாகக் கொள்ளத்தக்க பழந்தமிழ் இலக்கியம் ஆற்றுப்படை நூல்கள்.

தமிழின் முதல் பயண இலக்கியம் 1832இல் ஏனுகுல வீராசாமி ஐயரால் எழுதப்பட்ட காசி யாத்திரை.

பயண இலக்கிய முன்னோடி ஏ.கே. செட்டியார்
பயண இலக்கியப் பெருவேந்தர் சோமலெ
பயணம் என்பதற்குச் செலவு என்ற சொல்லைப் பயன்படுத்தியவர் திரு.வி.க.

புகழ்பெற்ற பயண இலக்கியங்கள்:

திவ்விய தேச யாத்திரை -  சேலம் பகடலு நரசிம்மலு நாயுடு
எனது இலங்கைச் செலவு - திரு.வி.க.
யான் கண்ட இலங்கை - மு.வ.

# பயண இலக்கியத்தின் முன்னோடி அ. க. செட்டியார்

அ.க.செட்டியார் (நவம்பர் 3, 1911 - செப்டம்பர் 10, 1983) தமிழில் பயண இலக்கியம் என்னும் புதிய இலக்கிய வகைக்கு முன்னோடியாக அமைந்தவர். இதழாசிரியர், எழுத்தாளர். முதன் முதலில் மகாத்மா காந்தி பற்றி வரலாற்று ஆவணப் படத்தை 1940 இல் தமிழில் எடுத்தவர்.
-->
-->
திருவண்ணாமலை அருகிலுள்ள கோட்டையூரில் பிறந்த இவரின் இயற்பெயர் கருப்பன். தனது இளமைக்கல்வியைத் திருவண்ணாமலையில் உள்ள நடுநிலைப் பள்ளியில் பயின்றவர், மேற்படிப்பு எதையும் படிக்கவில்லை. பின்னர் 1935 இல் ஜப்பானில் இம்பீரியல் ஆர்ட்ஸ் கலைக்கழகத்தில் புகைப்படத்துறையைப் பயின்றார். சிறப்புப் பயிற்சிக்காக 1937இல் நியூயோர்க் சென்று அங்கு Photographical Institute இல் ஓராண்டு பயின்று டிப்ளோமா பட்டம் பெற்றார்.

VAO Exam Study Notes - பத்திரம் பதிவு செய்யும் முறை

நாம் வாங்கும் இடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புல எண்களில்அமைந்திருக்கலாம். ஒவ்வொரு புல எண்ணிற்கும் அது அமைந்திருக்கும் இடத்தை பொறுத்து அரசாங்கம் மதிப்பீடு செய்து ஒரு விலை நிர்ணயம் செய்யும். அதற்கு பெயர் Guideline value.

நாம் பத்திரம் பதிவு செய்யும் போது இந்த பெயர் Guideline valueக்கு 8% முத்திரை தாள்களாக வாங்கி அதில் கிரயப் பத்திரத்தின் விவரங்கள் டைப் செய்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். முழு மதிப்பிற்கும் (8%) முத்திரைத்தாள்கள் வாங்க முடியாத நிலையில், ஏதாவது ஒரு மதிப்பிற்கு முத்திரைத் தாள் வாங்கிவிட்டு மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தலாம்.

Arivu TNPSC New Model Question Papers pdf download

Arivu TNPSC, Kallakurichi
New Model Question Paper Collection
 
8th Tamil & Pallavar Kaalam
9th Tamil & சிற்றிலக்கிய காலம்

TNPSC VAO Exam Basics of Village Administration Study Material

நிலம் தொடர்பான விவரங்கள் இருதுறைகளில் பராமரிக்கப்படுகின்றன. 
1. பதிவுத்துறை 2. வருவாய்த்துறை
1. பதிவுத்துறை:
நாம் சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப்பத்திரத்தை  (Sale Deed) சார்பதிவாளர் (Sub- Registration Office) அலுவலகத்தில் தான் பதிவு செய்ய வேண்டும்.

2. வருவாய்த்துறை:

இந்த துறையில்தான் நிலத்திற்கான விவரங்கள் கீழ்க்கண்ட பதிவேட்டில் இருக்கும்.
பட்டா (Patta)
சிட்டா  (Chitta)
அடங்கல் (Adangal)
அ’ பதிவேடு (‘A’ Register)
நிலத்திற்கான வரைபட எல்லை (FMB)

அலுவலகக் கலைச் சொற்களுக்குத் தமிழாக்கம்


TNPSC General tamil Part B & C Tamil ilakkiya varalaru modelquestion paper
TNPSC New Syllabus Tamil Model Question Papers
Tamil ilakkanam Study Materials (44 Pages Pdf)
Arivu TNPSC Model Question Paper with Answerkey
அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்கள்
Group 4 Model Question Paper 

தமிழில் உள்ள தொகைச்சொற்கள்


ரெக்கார்ட் - ஆவணம்
செகரட்டரி - செயலர்
மேனேஜர் - மேலாளர்
பைல் - கோப்பு

கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) V.A.O வின் பணிகள்


கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) என்பவர் வருவாய் ஆவணங்களைப் பராமரிப்பது, நில வரி உள்ளிட்ட வரி வசூல்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு, சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று விநியோகம், விபத்துகள் குறித்த ஆய்வறிக்கை, புயல், மழை, வெள்ளம், போன்ற இயற்கை சீற்றங்களின் பாதிப்புகள் குறித்து மேல் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புவது உள்பட பொறுப்பு மிக்க ஏராளமான பணிகளைச் செய்ய வேண்டியவர்களாக உள்ளனர்.
கிராமத்தை நிர்வகிப்பதற்கு என கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ), கிராம காவலர், கிராமப் பணியாளர் மற்றும் பாசனக் காவலர் ( தலையாரி ) என நான்கு ஊழியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

பணிகள்


1. பட்டா பெயர் மாற்றுதல்.

2. கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல்.

3. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.

4. சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்பு சான்று ஆகிவையவை வழங்குவது குறித்து அறிக்கை அனுப்புதல்.

கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணி நியமன விதிகள்:

தமிழ்நாடு அமைச்சுப்பணி விதி 38(பி) (ii) பிற்சேர்க்கை X

1. வருவாய்த்துறையில் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான பணி நியமனம், நேரடி நியமனம் மூலமாக அமைந்திருக்கும்.

2. இப்பதவிக்கான நியமன அலுவலர் சமபந்தப்பட்ட கிராமத்தின் அதிகார வரம்பு பெற்றிருக்கின்ற வருவாய் கோட்ட அலுவலராகும்.
 
3. பணி நியமனங்களில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு(பொது விதி 22) இப்பதவிக்கான நேரடி நியமனத்திற்கும் பொருந்தும்.
 
இந்த நேரடி நியமனத்திற்கு ஒவ்வொரு மாவட்டமும் ஒரு தனி அலகாகக் கருதப்படும்.

Village Administrative officer exam Notifications 2015

VAO தேர்விற்கான அறிப்பு 12-11-2015 வெளியாகியுள்ளது. இத்தேர்வு பற்றிய விளக்கங்கள் பின்வருமாறு :
பணியின் பெயர் : 2014 - 15ஆம் ஆண்டிற்கான கிராம நிர்வாக அலுவலர்
மொத்த பணியிடங்கள் : 813

Group 1 Exam (8-11-2015) Tentative Answer Keys


TNPSC official answer key
Group 1 Exam (8-11-2015) Tentative Answer Keys
 Sl.No.
Subject Name
posts included in CCS-I Examination (Group-I Services)
(Date of Examination:08.11.2015 FN)
       1
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 18th November 2015 will receive no attention.

Group IIA Services Online Registration last date extended upto 18th November 2015.


Group IIA Exam Online Registration 
last date extended upto 18-11-2015.

# சிற்றிலக்கியங்கள்

சிற்றிலக்கியம் அளவில் (பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கை) சுருங்கியதாக அமைவது.
அகப்பொருள் அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப் பற்றியதாக அமையும். (கோவை போன்ற சில சிற்றிலக்கியங்கள் பல துறைகளைக் கொண்டு அமைவதும் உண்டு.)

பாடப்பெறும் கடவுள் அல்லது மன்னன் அல்லது வள்ளல் ஆகியோருடைய வாழ்வின் ஒரு சிறு கூறு மட்டுமே விளக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக: உலா இலக்கியம் தலைவன் உலாவரும் காட்சியை மட்டுமே சிறப்பித்துப் பாடப்படுவது. 

அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு உறுதிப் பொருள்களுள் ஏதேனும் ஒன்றைத் தருவதாக அமைவது சிற்றிலக்கியம். இவ்வகையில் தூது, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம் கோவை, குறவஞ்சி போன்ற பலவகை இலக்கியங்கள் சிற்றிலக்கியம் என்ற வகைமையுள் அடங்கும்.

# முகமது இக்பால்

கவிஞரும், மெய்யியல் அறிஞருமான சர் முகமது இக்பால் (Muhammad Iqbal) பிறந்த தினம்  நவம்பர் 9. 

அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# ஒருங்கிணைந்த இந்தியாவின் பஞ்சாப் மாகாணம் சிலாகோட்டில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) வியாபாரக் குடும்பத்தில் (1877) பிறந்தார். பள்ளிப் பருவத்திலேயே அறிவுக்கூர்மை மிக்க மாணவராகத் திகழ்ந்தார்.
--> # லாகூர் அரசு கல்லூரியில் பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் தத்துவத்தில் பட்டம் பெற்றார். லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்றார். சட்டம் பயிலும்போதே பல கவிதைகளைப் படைத் தார். இவரது முதல் கவிதை நூல் பாரசீக மொழியில் வெளிவந்தது. அரபு, உருது மொழிகளிலும் கவிதைகள் எழுதினார். ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மனி மொழிகளிலும் புலமை மிக்கவர்.

# இந்திய அரசியலமைப்பு பகுதி-11 | மாநில அரசாங்கம்

மாநில ஆளுநர்

பெயரளவிலான நிர்வாகத்துறைத் தலைவராகத் திகழ்பவர் மாநில ஆளுநர் (Governor).
--> குடியரசுத்தலைவரால் ஆளுநர் நியமிக்கப்படுகிறார். குடியரசுத் தலைவர் ஆளுநரை நியமிக்கும் போது அந்த மாநிலத்தின் முதலமைச்சரைக் கலந்தாலோசிக்கலாம்.

பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். ஆனால் குடியரசுத்தலைவர் அவரை எப்போது வேண்டுமானாலும் பதவி நீக்கம் செய்யலாம்.

1956-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 7-வது அரசமைப்பு சட்ட திருத்தத்தின்படி குடியரசுத்தலைவர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஒரே ஆளுநரை நியமிக்கலாம்.

தமிழில் உள்ள தொகைச் சொற்கள்

இருமை        -    இம்மை, மறுமை
இருவினை    -    நல்வினை, தீவினை
இருதிணை    -    உயர்திணை, அஃறிணை
இருசுடர்        -    ஞாயிறு, திங்கள்
ஈரெச்சம்        -    வினையெச்சம், பெயரெச்சம்
மூவிடம்        -    தன்மை,முன்னிலை, படர்க்கை
முந்நீர்        -    ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர்
முப்பால்        -    அறத்துப்பால், பொருட்பால்,   காமத்துப்பால்
முத்தமிழ்    -    இயற்றமிழ், இசைத்தமிழ்,  நாடகத்தமிழ்

Current Affairs Questions Answers 2015 Pdf free download

Arivu TNPSC Current Affairs 2015 Test Paper

TTSM Current Affairs 2015 Model Test Papers

# இந்திய அரசியலமைப்பு பகுதி-10 | பாராளுமன்றம்

பாராளுமன்றம்

இந்திய நாடாளுமன்றம் அல்லது இந்தியப் பாராளுமன்றம், மாநிலங்களவை (ராஜ்யசபா) மற்றும் மக்களவை (லோக்சபா) ஆகிய இரு அவைகளைக் கொண்டது.

மக்களவை (லோக் சபா)

மக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 543 உறுப்பினர்களையும், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும்.
மக்களவையின்  பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவரையே குடியரசுத் தலைவர் பிரதமராக நியமிப்பார். மக்களைவையின் நம்பிக்கையை பெற்றிருக்கும் வரையில் மட்டுமே பிரதமரும் அவரது அமைச்சரவையும் பதவியில் நீடித்திருக்க முடியும் .