# ஏழாவது முறை ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ள சர்வர் ஜெயகணேஷ்!

"வெற்றி கிடைக்கும் வரை தொடர்ந்து முயற்சி செய்...”

என்ற பொன்மொழிக்கு உகந்த எடுத்துக்காட்டு ஜெயகணேஷ் என்பவரின் விடாமுயற்சி கதை. சிவில் சர்வீஸ் தேர்வில் ஆறு முறை தோல்வியுற்று, மனம் தளராமல் ஏழாம் முறை எழுதி அதில் தேர்ச்சி ஆகியுள்ளார் வெயிட்டர் பணியில் இருந்து கொண்டே படித்த இவர்.

ஜெயகணேஷ் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் வேலூர் மாவட்டம் வினவமங்களம் என்ற கிராமத்தில் பிறந்தவர். அவரின் அப்பா அங்கே ஒரு லெதர் பாக்டரியில் பணிபுரிகிறார். தாய் வீட்டில் குடும்பத்தை கவனிக்கிறார். இரண்டு தங்கைகள் மற்றும் ஒரு தம்பி உடைய ஜெயகணேஷ், குடும்பத்தின் மூத்த மகன். 8-ம் வகுப்பு வரை கிராமப்பள்ளியில் படித்துவிட்டு, அருகாமை டவுனில் 9-ம் வகுப்பு முதல் படித்தார்.

படிப்பில் அதிக ஆர்வம் கொண்ட ஜெயகணேஷ் எப்போதும் வகுப்பில் முதல் இடம் பிடிப்பார். ஏழ்மையில் வாடும் தன் குடும்பத்தை காப்பாற்றி, அப்பாவின் சுமையை குறைக்க, சீக்கிரம் படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்ல காத்திருந்தார் அவர். அதையே தன் வாழ்க்கை இலக்காக கொண்டிருந்தார்.

10-ம் வகுப்பு முடித்ததும் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்தால், அதை முடித்தவுடன் வேலை உடனே கிடைத்துவிடும் என்று சொன்னதால் அதில் சேர்ந்தார் ஜெயகணேஷ். டிப்ளோமாவை 91% மார்க்குகள் பெற்று வெற்றிகரமாக முடித்தார். அரசு பொறியியல் கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைத்ததால், அதில் சேர்ந்து மெக்கானிகல் இஞ்சினியரிங் படித்தார். ஜெயகணேஷின் படிப்புக்கு அவரின் தந்தை எப்போதும் ஆதரவாக இருந்துள்ளார்.

தொடர்ந்து படிக்க...



No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற