# Jana TNPSC Tamil Study Materials | தமிழ் வளர்த்த சான்றோர்

*

  • புதுக்கவிதைக்கு     -    பாரதியார்
  • சமுதாயப் புரட்சிக்கு     -    பாரதிதாசன்
  • பொதுவுடைமைக்கு     -    திரு.வி.க
  • தனித்தமிழுக்கு     -    மறைமலையடிகள்
  • பேச்சுக்கலைக்கு     -    அறிஞர் அண்ணா
  • சிறுகதைக்கு     -    புதுமைப்பித்தன்


வீரமாமுனிவர் (1680 - 1747)
  • இவர் இத்தாலி நாட்டில் பிறந்தார்.
  • இவரின் இயற்பெயர் ‘கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி’
  • இவர் தமது முப்பதாம் அகவையில் சமயத் திருப்பணியாற்ற தமிழகம் வந்தார்.
  • ஆங்கிலம், எபிரேயம், கிரேக்கம் ஆகிய மொழிகளை அறிந்திருந்தார்.
  • தமிழின் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தன் பெயரைத் ‘தைரியநாதர்’ என மாற்றிக்கொண்டார்.
  • பின்னர் தம் பெயரைத் தனித்தமிழாக்கி ‘வீரமாமுனிவர்’ எனச் சூட்டிக்கொண்டார்.
  • தமிழ்மொழி பயின்றதோடு தெலுங்கு, வடமொழி முதலிய மொழிகளையும் அவர் கற்றுத் தேர்ந்தார்.
  • தமிழில் முதன்முதலாகச் ‘சதுரகராதி’ என்னும் அகரமுதலியை வெளியிட்டார்.
  • கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் எனப் போற்றப்படும் ‘தேம்பாவணி’ என்னும் காப்பியத்தைப் படைத்தார்.
  • தமிழ் எழுத்து வரிவடிவத்தைத் திருத்தி, எழுத்துச் சீர்திருத்தம் மேற்கொண்டார்.
  • ‘தொன்னூல் விளக்கம்’ என்னும் இலக்கண நூலைப் படைத்தார். இந்நூல் குட்டித் தொல்காப்பியம் எனப் போற்றப்படுகிறது.
  • கலம்பகம், அம்மானை போன்ற சிற்றிலக்கிய வகை நூல்களை இயற்றினார்.
  • பரமார்த்த குரு கதை என்னும் நகைச்சுவை நூலை எழுதினார்.
  • “தேம்பாவணி, காவலூர்க்கலம்பகம் கதம்ப மாலையாகக் காட்சியளிக்கிறது. தொன்னூல் பொன் நூலாக இலங்குகின்றது. சதுரகராதி முத்தாரமாக மிளிர்கின்றது. வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்” என ரா.பி.சேதுப்பிள்ளை வீரமாமுனிவருக்குப் புகழாரம் சூட்டினார்.

  • குணங்குடி மஸ்தான் (1788-1835)

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற