
ஊழலை ஒழிப்பதற்கான லோக்பால் மசோதாவை ஆய்வு செய்த நிலைக்குழுவின் அறிக்கை, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அக்குழு, லோக்பால் மசோதா வரம்புக்குள் பிரதமரைச் சேர்க்கும் விஷயத்தைப் பாராளுமன்றத்தின் முடிவுக்கே விட்டுவிட்டது. நீதிபதிகள், எம்.பி.க்களை சேர்க்கவும் மறுத்துவிட்டது. (டிசம்பர் 9)
சேவாக் உலக சாதனை
இந்தூரில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில், 40 ஆண்டு கால ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற புதிய உலக சாதனையை வீரேந்தர் சேவாக் படைத்தார்.