புறப்பொருள் (வெட்சித்திணை, கரந்தைத் திணை...)


அறம், பொருள், வீடு பற்றியும், கல்வி, வீரம், கொடை, புகழ் முதலியன பற்றியும் கூறுவது புறப்பொருளாகும்.

வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை எனப் புறத்திணைகள் பன்னிரண்டு வகைப்படும்.


1. வெட்சித்திணை

பகைநாட்டின் மீது போர் தொடுக்க விரும்பும் அரசன் அந்நாட்டிலுள்ள ஆநிரைளுக்குப் (பசுக்கூட்டங்களுக்கு) போரால் துன்பம் நேரக்கூடாது என்பதற்காகப் போர் தொடங்குமுன் தன் வீரர்களை அனுப்பிப் பகை நாட்டிலுள்ள பசுக்கூட்டங்களைக் கவர்ந்து வரச்செய்வான்.  அவ்வாறு நிரைகவரச் செல்லும் வீரர்கள் வெட்சிப்பூவைச் சூடிச் செல்வர். அதுவே வெட்சித் திணையாகும்.

2. கரந்தைத் திணை

வெட்சி வீரர்களால் கவர்ந்து செல்லப்படும் தம் நாட்டு ஆநிரைகளை மீட்கச் செல்வோர் கரந்தைப் பூவைச்சூடிச்சென்று மீட்பர். அது கரந்தைத் திணையாகும்.

3. வஞ்சித் திணை

மண்ணாசையால் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதிப் போருக்குச்செல்லும் அரசன் வஞ்சிப்பூவைச் சூடிச் செல்வான். அது வஞ்சித் திணையாகும்.

4. காஞ்சித் திணை

ஓர் அரசன் தன் நாட்டின் மீது போர் குறித்து வந்த மாற்றரசனோடு எதிர்சென்று போர்புரிதல் காஞ்சித்திணையாகும்.  அவன் காஞ்சிப்பூவைச் சூடிச் செல்வான்.

5. நொச்சித் திணை

பகையரசனால் முற்றுகையிடப்பட்ட தம் மதிலை அம்மதிலுக்குரிய அரசன் உள்ளிருந்தே வெளியே இருக்கும் பகைவரொடு, பொருது அம்மதிலைக் காப்பதாகும்.  மதில் காக்கும் வீரர் நொச்சிப்பூவைச் சூடுவர்.

6. உழிஞைத் திணை

மாற்றரசனின் கோட்டையை நாற்புறமுஞ் சூழ்ந்து பொருது தன் படைகளுடன் அதனுட் புகுந்து அதனைப் கைப்பற்றுதல் உழிஞைத்திணையாகும், அவ்வீரர் உழிஞைப் பூச்சூடுவர். கோட்டையை முற்றுகையிடுதல் உழிஞையாகும்.

7. தும்பைத்திணை

பகை வேந்தர் இருவரும் தத்தம் படைகளுடன் தன்னலம் கருதாது வெற்றி ஒன்றையே கருதி ஊக்கத்தோடு போரிடல் தும்பைத் திணையாகும், இதற்குத் தும்பைப் பூவைச் சூடுதல் மரபு.

8. வாகைத்திணை

போரிடும் வேந்தருள் வெற்றி பெறுபவன் வாகைப்பூவைச் சூடிமகிழ்வான்.  இது வாகைத் திணையாகும்.

 9. பாடாண் திணை

ஒரு மன்னனின் புகழ், வலிமை, கொடை, இரக்கம் முதலியவற்றைப் புகழ்தல் பாடாண் திணையாகும்.

10. பொதுவியல் திணை

வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைக்கெல்லாம் பொதுவாக உள்ளனவும் அவற்றுள் கூறப்படாதனவும் ஆகிய செய்திகளைக் கூறுவது பொதுவியல் திணையாகும்.

11. கைகிளைத் திணை

கைக்கிளை என்பது ஒருதலைக்காமம். இது ஆண்பாற் கூற்று. பெண்பாற் கூற்று என இருவகைப்படும்.

12. பெருந்திணை

பெருந்திணையாவது பொருந்தாக்காமம். இதுவும் ஆண்பாற் கூற்று, பெண்பாற் கூற்று என இருவகைப்படும்.

தமிழ் இலக்கணம் பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும் 

2 comments :

  1. நல்லது... பல நண்பர்களுக்கு உங்கள் தளத்தை பகிர்கிறேன்...

    நன்றி...

    ReplyDelete
  2. naan mbc male and B.A Tamil 160/200 enakku kidaikkuma

    ReplyDelete

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற