# இடைக்கால பக்தி இயக்கம் Part-I

இராமானுஜர்:
  • தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்பெரும்புதூரில் தோன்றியவர்.
  • வைணவ சமயப் பணிக்குத் தம்மை அர்ப்பணித்தவர்.
  • இவரது கோட்பாடு விசிட்டாத்வைதமாகும்.
  • சரணாகதி நெறியை வலியுறுத்தி சாதி வேறுபாடின்றி அனைவரையும் முக்தி அடையத் தகுதி உடையவர் என்றார்.
மத்துவர்:
  • தென் கன்னடத்தில் உடுப்பிக்கு அருகே சிறு கிராமத்தில் தோன்றினார். 
  • இவரது இயற்பெயர் வாசுதேவன்.
  • அச்சுதப் பிரகாசரிடம் தீட்சைப் பெற்று பூரண பிரக்ஞர். 
  • ஆனந்த தீர்த்தர் எனவும்  போற்றப்பட்டார்.
  • இவரது தத்துவம் துவைதம் என்பதாகும்.
இராமாநந்தர்:
  • இவரது முயற்சியால் வைணவம் வடக்கே பரவியது.
  • இராமர் கீதை வழிபாட்டை பரப்பினார்.
  • சாதிப் பாகுபாட்டினை அறவே வெறுத்தார்.
  • இறைவன் முன் அனைவரும் சமம் எனக் கூறினார்.
  • சமயக் கருத்துக்களை முதன் முதலில் ந்தி மொழியில் பரப்பியவரும் இவரே ஆவார்.

நிம்பர்க்கர்:
  • இவர் தென்னிந்தியாவில் கோதாவரி நதிக்கரையில் சிறு கிராமத்தில் பிறந்தார்.
  • வடஇந்தியாவில் மதுராவிற்கருகேயுள்ள பிரஜா என்ற இடத்தில் வாழ்ந்தார்.
  • இவரது பக்தி நெறியைச் சேர்ந்தோர் இராதாகிருஷ்ண வழிப்பாட்டில் நம்பிக்கைக்  கொண்டிருந்தனர்.
  • இவரும் ‘சரணாகதி’ நெறியை வலியுறுத்தினார்.
  • இவரது கொள்கை பேதாபேதம் என்று அழைக்கப்படுகிறது.

கபீர்:
  • காசிக்கு அருகே லகர்டேலோ என்ற ஏரியில் தாமரை மலரிலிருந்த குழந்தையை முஸ்லீம் நெசவாளரால் வளர்க்கப்பட்டவர்.
  • இராமானந்தரால் சீடராக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.
  • இந்து முஸ்லீம் சமய ஒற்றுமைக்குப் பெரிதும் பாடுபட்டார்.
  • கடவுளிடம் அன்பு செலுத்துவதே நற்கதி அடைய வழி என்றார்.
  • உண்மையே இயல்பானது. அது இல்லோர் இதயத்திலும் உறைகின்றது. அவ்வுண்மை  அன்பினால் வெளிப்படுகிறது என்ற கருத்தை உடையவர்.
  • பக்தியை வலியுறுத்தாத சமயம் சமயமன்று என்றார்.

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற