samacheer kalvi 10th book study material - தொன்மைத் தமிழகம்

  • முதல் மாந்தன் தோன்றிய இடம் இலெமூரியா.
  • இலெமூரியாவை “மனித நாகரிகத் தொட்டில்” என்பர்.
  • தமிழகம் இன்றுபோல் இல்லாமல், குமரிமுனைக்குத் தெற்கே இன்னும் விரிந்து, குமரிமலை, பஃறுளி ஆறு முதலியவற்றை உள்ளடக்கி இருந்தது.  இச்செய்தியைப் “பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள...” எனும் சிலப்பதிகாரப் பாடல் வரிகள் தெளிவாக உணர்த்துகிறது.
  • “திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்க ளோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்” என  தமிழின் பழமை சிறப்பினைப் பெருமிதம் பொங்க பாடியவர் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.

    வாணிகம்: 
  • தமிழர்கள் அறத்தின் வழியே வாணிகம் செய்தார்கள்.  பொருள் ஈட்டுவது  ஒன்றையே  குறிக்கோளாகக்  கொள்ளாதவர்கள்.  உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொருள் ஈட்டினர். 
  • நெல், கம்பு, சோளம், கேழ்வரகு,  தினை, சாமை, வரகு முதலிய தானிய வகைகளையும், உளுந்து, கடலை, அவரை, துவரை, தட்டை, பச்சை, கொள்ளு, எள்ளு முதலிய பருப்பு வகைகளையும் தமிழர்கள் விற்றார்கள்.
    கடல் வாணிகம்: 
  • பொன்னும், மணியும், முத்தும், துகிலும்  கொண்டு கடல் கடந்து வாணிகம் செய்தனர்.
  • கிறித்து பிறப்பதற்கு முன்பே கிரேக்கம், உரோமாபுரி, எகிப்து ஆகிய நாடுகளுக்கு அரிசியும், மயில்தோகையும், சந்தனமும் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது.
  • கி.மு.பத்தாம் நூற்றாண்டில் அரசன் சாலமனுக்கு யானைத் தந்தமும், மயில்தோகையும், வாசனைப் பொருள்களும் அனுப்பப்பட்டன.
  • தமிழர்கள் சாவக நாட்டுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.

    மொழித் தொன்மை: 
  • தமிழ்ச்சங்கம் இருந்தது என்ற மரபுச் செய்தி இடைவிடாது இருந்து வருகிறது.  இத்தகைய மரபுச் செய்தி  இந்தியாவில்  வேறெங்குமில்லை என்றார் தனிநாயகம் அடிகளார்.
  • “தமிழ்கெழு கூடல்” என புறநானூறு கூறுகிறது.
  • “தமிழ்வேலி” எனப் பரிபாடல் கூறுகிறது.
  • “கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்” என மணிவாசகம் கூறுகிறது.

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற