# முகமது இக்பால்

கவிஞரும், மெய்யியல் அறிஞருமான சர் முகமது இக்பால் (Muhammad Iqbal) பிறந்த தினம்  நவம்பர் 9. 

அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# ஒருங்கிணைந்த இந்தியாவின் பஞ்சாப் மாகாணம் சிலாகோட்டில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) வியாபாரக் குடும்பத்தில் (1877) பிறந்தார். பள்ளிப் பருவத்திலேயே அறிவுக்கூர்மை மிக்க மாணவராகத் திகழ்ந்தார்.
--> # லாகூர் அரசு கல்லூரியில் பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் தத்துவத்தில் பட்டம் பெற்றார். லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்றார். சட்டம் பயிலும்போதே பல கவிதைகளைப் படைத் தார். இவரது முதல் கவிதை நூல் பாரசீக மொழியில் வெளிவந்தது. அரபு, உருது மொழிகளிலும் கவிதைகள் எழுதினார். ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மனி மொழிகளிலும் புலமை மிக்கவர்.


# மூனிச் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இந்தியா திரும்பியதும் வழக்கறிஞர் தொழிலை ஆரம்பித்தார். ஆனாலும்கூட, இவரது இலக்கியத் திறன்தான் இவரை உலகப்புகழ் பெற வைத்தது. மிர்ஸா குர்கானி, ஹகீம் ஆமின் உத்தீன், ஹக்கீம் சுஜா உத்தீன், அப்துல் காதர் போன்ற படைப்பாளிகளுடனான தொடர்பு இவரை மேலும் பட்டை தீட்டியது.

# அரசியல், பொருளாதாரம், வரலாறு, மெய்யியல், சமயம் ஆகிய துறைகளில் ஏராளமாக எழுதியுள்ளார். இவர் எழுதிய ‘சாரே ஜஹான் ஸே அச்சா’ பாடல் 1947-ல் இந்திய நாடாளுமன்றத்தில் முதல்முறையாக ஒலித்தது.


  # நவீனகால இஸ்லாமிய சிந்தனையாளர்,  உருது பேசும் மக்களால் ‘கிழக்கின் கவிஞர்’ என்று குறிப்பிடப்பட்டார்.

read more... download Pdf file

1 comment :

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற