# திருவருட் பிரகாச வள்ளலார்

* பத்தாம் வகுப்பு - தமிழ் - உரைநடைப்பகுதி
 திருவருட் பிரகாச வள்ளலார்
1) இலிங்கிச் செட்டி தெரு அமைந்துள்ள ஊர்?
சென்னை
=========================
2) சென்னை இலிங்கிச் செட்டித் தெருவில் “உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்” – என்னும் பாடலை பாடி அதற்கு நெடுநேரம் பொருள் கூறிய ஒன்பது வயது சிறுவன்?
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகளார்
=========================
3) சாதிகளிலும் மதங்களிலும் சமயச் சடங்குகளிலும் உழன்று கொண்டிருந்த மக்களை அவற்றிலிருந்து மீண்டுவர வள்ளலார் அமைத்த பாதை?
சமசர சுத்த சன்மார்க்கப்பாதை
=========================
4) எந்த நூற்றாண்டை தமிழின் மறுமலர்ச்சிக் காலம் என அறிஞர் போற்றுவர்?
பத்தொன்பதாம் நூற்றாண்டு
=========================
5) பத்தொன்பதாம் நூற்றாண்டில் புலவர் பெருமக்களாலும் சமூகச் சீர்த்திருத்தச் செம்மல்களாலும் போற்றப்படும் பெருஞ்சிறப்பினைப் பெற்றவர்?
வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகளார்
=========================
6) வள்ளலார் இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர்?
மருதூர் – சிதம்பரம் வட்டம் – கடலூர் மாவட்டம்
=========================
7) வள்ளலார் இராமலிங்க அடிகளார் பிறந்த தேதி?
05.10.1823
=========================
8) வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் பெற்றோர்?
இராமைய்யா & சின்னம்மை
=========================
9) இராமைய்யா சின்னம்மைக்கு இராமலிங்க அடிகளார் எத்தனையாவது மகவாக பிறந்தார்?
ஐந்தாவது மகவு
=========================
10) இறைவழிபாட்டின்போது விழியசைக்காமல் இறைவனைப் பார்த்துச் சிறித்த குழந்தை?
இராமலிங்க அடிகளார்
=========================


11) தில்லை ஆலய அந்தணர் வள்ளலார் இராமலிங்க அடிகளாரை எவ்வாறு பாராட்டினார்?
இறையருள் பெற்ற திருக்குழந்தை
=========================
12) இறைவன் தம்மை வருவிக்க உற்றதாகக் கூறியவர்?
வள்ளலார்
=========================
13) அகத்தே கருத்துப் புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்த – என்று பாடியவர்?
வள்ளலார்
=========================
14) இராமலிங்கர் பிறந்து எத்தனையாவது மாதத்தில் தன் தந்தையார் மறைந்தார்?
பிறந்த ஆறாவது திங்களில்
=========================
15) இராமலிங்கருக்கு ஐந்து வயதானவுடன், கல்வி கற்க அவரை தம் அண்ணன் யாரிடம் அனுப்பிவைத்தார்?
சபாபதி ஆசிரியர்
=========================
16) இராமலிங்க அடிகளார் எத்தனை வயதில் பாடல் புனையும் ஆற்றல் பெற்றிருந்தார்?
ஒன்பது வயதில்
=========================
17) திருவொற்றியூர்ச் சன்னதி வீதியில் ஒரு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தவர்?
திகம்பர சாமியார்
=========================
18) தெருவில் செல்லும் மனிதர்களை “அதோ ஆடு போகிகிறது, அதோ மாடு போகிகிறது, அதோ நரி போகிறது” என்று அவரவர்களின் குணத் தன்மைகளுக்கேற்ப விலங்குகளின் பெயர்களால் கூறியவர்?
திகம்பர சாமியார்
=========================
19) இதோ ஓர் உத்தம மனிதர் போகிறார் என்று திகம்பர சாமியார் யாரை கூறினார்?
வள்ளலார் இராமலிங்க அடிகளார்
=========================
20) தருமமிகு சென்னையில் உள்ளா கந்தகோட்டத்து இறைவனை வணங்கி மனமுருகப் பாடியவர்?
இராமலிங்க அடிகளார்

read more... & download pdf 

Ayakudi Current Affairs 2018 
Jana Tamil Question Bank (6th Tamil Model Test)
Jana Tamil Question Bank (10th Tamil Model Test)

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற