# இந்திய விடுதலைப் போரில் தமிழகப்பெண்களின் பங்கு


வேலு நாச்சியார்:
  • வேலு நாச்சியார் வீரமும் நுண்ணறிவும் ஒருங்கே அமையப்பெற்றவர். இவரே ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி.
  • இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் செல்லமுத்து சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாள் இணையருக்குக் கி.பி.1730ஆம் ஆண்டு ஒரே பெண் மகவாகத் தோன்றியவர் வேலு நாச்சியார். இவர், பெற்றோரால் ஆண் வாரிசைப்போன்றே வளர்க்கப்பட்டு, ஆயுதப்பயிற்சிமுதல் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார்.
  • சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் வேலு நாச்சியாரை மணந்துகொண்டார்.
  • ஆங்கிலேயர் 1772ஆம் ஆண்டு சிவகங்கைச் சீமையின்மீது படையெடுத்தனர். ஆங்கிலேயருக்கும் முத்துவடுகநாதருக்கும் இடையே போர் நடைபெற்றது.
    read more 
கடலூர் அஞ்சலையம்மாள்
  • கடலூர் அஞ்சலையம்மாள் 1890ஆம் ஆண்டு கடலூரில் உள்ள முதுநகரில் எளிமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார்.
  • 1921ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய போதே, அஞ்சலையம்மாளும் தமது பொதுவாழ்க்கையைத் தொடங்கினார்.
  • அஞ்சலையம்மாள், நீலன் சிலையை அகற்றும் போராட்டம், உப்புக் காய்ச்சும் போராட்டம், மறியல் போராட்டம், தனியாள் அறப்போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டு பல ஆண்டு சிறையில் வாடினார்.
  • மேலும் அவர் கடலூர், திருச்சி, வேலூர், பெல்லாரி ஆகிய சிறைகளில் இருந்துள்ளார். வேலூர்ச் சிறையில் இருந்தபோது, கருவுற்றநிலையில் இருந்த அவரை ஆங்கிலேய அரசு வெளியில் அனுப்பிவிட்டு, மகப்பேற்றிற்குப் பின் மீண்டும் சிறையில் அடைத்தது.
  • காந்தியடிகள் அஞ்சலையம்மாளைத் தென்னாட்டின் ஜான்சிராணி என்றழைத்தார்.
    read more
அம்புஜத்தம்மாள்
  • அம்புஜத்தம்மாள் வசதியான குடும்பத்தில் 1899ஆம் ஆண்டு சனவரித் திங்கள் எட்டாம் நாள் பிறந்தார்.
  • அன்னை கஸ்தூரிபாயின் எளிமையான தோற்றத்தினால் ஈர்க்கப்பட்டு, எளிமையாக வாழ்ந்தார். பட்டு, பகட்டு, ஆங்கிலமோகம் அனைத்தையும் துறந்தார். பல்வேறு கட்டுப்பாடுகள் மிகுந்த குடும்பத்திலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்டார் .
  • வை.மு.கோதைநாயகி அம்மாள், ருக்குமணி லட்சுமிபதி முதலியவர்களோடு நட்புக்கொண்டு பெண்ணடிமைக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.
  • காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று செல்லமாக அம்புஜத்தம்மாள் அழைக்கப்பட்டார்.
  • தந்தையின் பெயரோடு, காந்தியடிகளின் பெயரையும் இணைத்துச் சீனிவாச காந்தி நிலையம் என்னும் தொண்டு நிறுவனத்தை அமைத்தார்.
  • அம்புஜத்தம்மாள் தம் எழுபதாண்டு நினைவாக, நான் கண்ட பாரதம் என்னும் அரிய நூலை எழுதியுள்ளார்.
மேலும் விரிவாக படிக்க & PDF பதிவிறக்கம் செய்ய



புதிய பாடத்திட்டம் 2018 - ஆறாம் வகுப்பு - பாடக்குறிப்புகள் 
Akash IAS Academy Study Materials
TNPSC Science question and answer in tamil 
தமிழ் இலக்கிய கேள்வி பதில்கள்-25 
தமிழ்நாடு காவல்துறை காவலர் தேர்வு உளவியல் வினா விடைகள் 
Tamilnadu police exam - GK Questions and answers in tamil
பொது அறிவு கேள்வி பதில்கள்
GENERAL TAMIL QUESTION AND ANSWER
APTITUDE & MENTAL APILITY TEST
Tamil Ilakkiya Varalaru Vina Vidai
TNPSC, TRB, TET & POLICE EXAM GK ONLINE TEST
இந்திய அரசியல் அமைப்பு FREE ONLINE TEST 
List of competitive exams in india

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற