ஒரு வாரத்தில் வெளியாகிறது ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அறிவிப்பு

ஆசிரியர் தகுத் தேர்விற்கான அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என்று உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.


இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், மாஃபா பாண்டியராஜன், ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

மேலும், பிளஸ்-1, பிளஸ்டூ வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் தயார் செய்யப்பட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comment :

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற